திருப்பதி, ஜூன் 16 ஆந்திரமாநிலம் திருப்பதி அருகே செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக, தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு ள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் சிறீவாரி மெட்டு அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, 10 நபர்கள் செம்மரக்கட்டை கடத்தி வந்ததாகவும், பிடிக்க முயன்றபோது ஆங்காங்கே செம்மரக் கட்டைகளை வீசிவிட்டு தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது. அதில் திருவண்ணாமலை மாவட்டம் வீரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த குமார், வேலூர் மாவட்டம் குட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்த விநாயகன் ஆகிய இருவரை மட்டும் துரத்திப் பிடித்ததாக ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர். கடத்தல்காரர்கள் விட்டுச்சென்ற ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 13 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து தப்பியோடியவர்களை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.